இன்றைய பதிவு

குமரகுருபரர்-நூல் விமர்சனம்


இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில், குமர குருபரர் குறித்து சாந்தி குமார சுவாமிகள் எழுதியுள்ள இப்புத்தகம், குமர குருபரரின் வாழ்க்கை, ஆன்மிகப் பணி, பக்தி இலக்கியப் படைப்புக்கள் பற்றி விளக்கமாக எடுத்து சொல்கிறது. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த குருபரரின் சேவை காசி மாநகர் வரை விரிந்து வியாபித்திருந்தது என்ற தகவலும், தமிழ் கடந்து பிறமொழிகளிலும் புலமை பெற்று, சிறந்த கவிஞர் என்று தகவலும் நன்கு எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. குமரகுருபரரின் நான்மணிமாலையும், நீதிநெறி விளக்கமும் தமிழர்களுக்கு கிடைத்த அருட்கொடை. சாந்திகுமார சுவாமிகள் மிகச்சிறப்பாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.


ஆசிரியர்: அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
வெளியீடு: சாகித்ய அகடமி
விலை:  ரூ.40



சாகித்ய அகடமி,
குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-18
மேலும் படிக்க...

கடலங்குடியின் அதர்வண வேதம்-நூல் விமர்சனம்

   வேதகால வாழ்வு முறைகளை அருமையாக எடுத்துரைக்கும் நூல். இந்து மதம் தொடர்பான நுட்பமான பல விஷங்களும், மருத்துவ மந்திரங்களும் இதில் விவரிக்கப் பெற்றுள்ளன.

  அதர்வண வேதம் என்பதே அரிய பல ரகசியங்களை உள்ளடக்கிய நூல் என்பனர். அவற்றை பூததந்த்ர கர்மாணி, ஆயுஷ்யாணி, ஸ்திரீகர்மாணி, ராஜ கர்மாணி போன்ற பதினாறு தலைப்புகளில் நமக்கு விவரிக்கும் அரிய நூல் இது. இயற்கை மருத்துவ விவரங்களும் உள்ளன. குறிப்பாக இன்றைய வாழ்வில் பழகிப்போன நின்றபடி டாய்லட்டில் சிறுநீர் கழிப்பதும் கூடாது போன்ற தகவல்களும் உண்டு.

ஆசிரியர்: பதிப்பக வெளியீடு
வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.75


கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்,
38, நடேச அய்யர் தெரு,
தி.நகர், சென்னை-17.
மேலும் படிக்க...

ஜாதகமே வாழ்க்கையா?- நூல் விமர்சனம்








   விஷயம் தெரியாதவர்களை ஏமாற்றி, பரிகாரம் என்ற பெயரில் கிரக நிவர்த்தி செய்வதாய்ச் செய்யும் ஜோதிடர்களின் பரிகாரப் பலன்கள் பலனளிக்காது என்று கூறும் ஆசிரியர் எழுதிய 24 கட்டுரைகளின் தொகுப்பு. கேலியும், கிண்டலுமான நடை. சுவைத்துப் படிக்கலாம்.
மேலும் படிக்க...

கற்பகம் சுத்த திருக்கணித பஞ்சாங்கம்- நூல் விமர்சனம்



  தமிழாண்டான "கர முதல் "விக்ரம வரை 50 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கம், வாக்கிய முறையிலும், திருக்கணித முறையிலும் தனித்தனியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில் அயனாம்ச அட்டவணை, கிரீன்விச் நேரத்திற்கும் பொதுமணிக்கும் உள்ள வித்தியாசம், திருமணப் பொருத்தம் உட்பட பல விஷயங்கள் உள்ளன. பொதுவாக கடந்த கால
மேலும் படிக்க...

யோகா... ஆஹா!- நூல் விமர்சனம்


    யோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம்! நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா.
இன்றைக்கு யோகா கலை அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. உலக அளவில், பலதரப்பட்ட நோய்களுக்கும் நிவாரணியாக யோகா பயிற்சிகளை (யோகா தெரபி) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மேலும் படிக்க...

நடை பாதை- நூல் விமர்சனம்



   நூலாசிரியர் பல்வேறு தமிழ் இணைய தளங்களில் எழுதிய இந்த சிறுகதைகள் அச்சின் மூலம் நூலாக்கப்பட்டு இருக்கிறது. நூலாசிரியர் கணினித் துறையில் மென்பொருள் பொறியாளராக இருப்பதால் இந்த நூலில் இருக்கும் பல சிறுகதைகள் கணினித்துறையில் இருப்பவர்களையும் அவர்களுக்கு வரும் பிரச்சனைகளையும் சார்ந்து இருக்கிறது.
மேலும் படிக்க...

எனது கீதை- நூல் விமர்சனம்


   ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இடம் பெறும் கல்வி, முயற்சி, வேலை, உழைப்பு, பணம், அனுபவம், காதல், திருமணம், குழந்தை, நட்பு, காலம், குடும்பம், ஒற்றுமை, வெற்றி தோல்வி, நம்பிக்கை, நகைச்சுவை, மகிழ்ச்சி, கடவுள் என்பது போன்ற 25 தலைப்புகள். இந்தத் தலைப்புகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவசியமான ஒன்றாக இருந்தாலும் இவை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டுப் போயிருப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும் என்கிற எண்ணத்தில் நூலாசிரியர் சிந்திக்க
மேலும் படிக்க...
previous